ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையின் கண்டன தீர்மானத்தை தடுப்பதற்கு சீனா ரஸ்யாவை நாடும் மியன்மார்
ரொகிங்யா முஸ்லீம்களிற்கு எதிரான வன்முறைகளை கண்டிக்கும் ஐக்கியநாடுகள் சபை தீர்மானத்தை தடுப்பதற்காக மியன்மார் சீனா மற்றும் ரஸ்யாவின் உதவியை நாடியுள்ளது.
மியன்மாரின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் தவுங் டன் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகளின் தீர்மானத்தை தடுத்துநிறுத்துவதற்காக பாதுகாப்பு சபையின் இரு நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஸ்யாவின் உதவியை நம்பியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்வதை தடுப்பதற்காக சில நேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்
சீனா எங்கள் நட்பு நாடு அதேபோன்று ரஸ்யாவும் எங்கள் நட்பு நாடு என அவர் தெரிவித்துள்ளார்.