செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை கவிழ்ப்பதற்கான எமது போராட்டம் தொடரும்-எஸ்.பீ.திசாநாயக்க

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து நாட்டிற்கு செய்யவிருந்த பாரிய அழிவு, பொருளாதார வீழ்ச்சி என்பவற்றை அடுத்தே அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்தது.அதனை தொடர்ந்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லும் வரை தற்காலிக அரசாங்கமொன்றே ஏற்படுத்தப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்தல் சாத்தியமற்றதாகியது.ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை கவிழ்ப்பதற்கான எமது போராட்டம் தொடரும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து இன்று சனிக்கிழமைஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.(15)