செய்திகள்

ஐ.தே.கவின் தலைமைத்துவம் தொடர்பாக அடுத்த வாரத்தில் தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பதவி தொடர்பாக அடுத்த வாரத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
நேற்று கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடத்தப்பட்ட போதும் அதன்போது தலைமைத்துவ குழு தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டுமென அங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீண்டும் அடுத்த வாரம் 16ஆம் திகதி கூடி தீர்மானம் எடுப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. -(3)