செய்திகள்

ஐ.நா படை தொடர்பான தகவல்களில் உண்மையில்லை : இலங்கை இராணுவம்

ஐ.நா படை இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லையென இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஐ.நா படையின் கவச வாகனங்கள் வீதியில் பயணிக்கும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ள நிலையில் அதன் உண்மை தன்மை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இராணுவ அதிகாரியொருவர் அது இலங்கைக்கு வந்த ஐ.நா படையல்லவெனவும் மாலி நாட்டுக்கான ஐ.நாவின் அமைதிப் படையுடன் இணையும் இராணுவத்தினரின் ஒத்திகை நடவடிக்கையே எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதனை சிலர் தவறான வகையில் தகவல்களை பரப்பி வருவதாகவும் அதில் உண்மையில்லையெனவும் இராணுவம் தெரிவித்துள்ளது. -(3)