செய்திகள்
கடற்படையினர் விசேட கண்கானிப்பு நடவடிக்கையில்
அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுவதற்கு இவ்வாறான நபர்களுக்கு எந்தவகையிலும் இடம் இல்லையென்று கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கான பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதால் கடல் வழியாக இவர்கள் தப்பியோட முடியாது. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. -(3)