செய்திகள்

கட்சி நிராகரித்தால் வேட்பாளர் கோரிக்கையை கைவிட தயார் – ஒருபோதும் கட்சி தாவ மாட்டேன் : சஜித்

கட்சி நிராகரித்தால் ஜனாதிபதி வேட்பாளர் கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாகவும் ஆனால் இறுதிவரை கட்சியின் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஐ.தே.க பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை எந்த காரணத்திற்காகவும் தான் கட்சியை விட்டு செல்லமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏவாரயினும் வேட்பாளராக நான் அறிவிக்கப்படுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும்அதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவிலும், பாராளுமன்ற குழுவிலும் வாக்கெடுப்பை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ளேன். எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று காலை அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். -(3)