செய்திகள்

கண்டியில் இன்றைய தினமும் நில அதிர்வு உணரப்பட்டது

கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மீண்டும் இன்றைய தினம் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் அந்த பகுதிகளில் இரவு நேரத்தில் பாரிய சத்தத்துடன் அதிர்வு உணரப்பட்டிருந்ததுடன் இன்றைய தினம் காலையிலும் அதேபோன்றதொரு அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இது சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நில அதிர்வு பதிவு மத்திய நிலையங்களிலும் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும் இது இயற்கையான நில அதிர்வா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக இன்னும் கண்டறியப்படவில்லை.
இது தொடர்பாக ஆய்வாளர்கள் பிரதேசத்திற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். -(3)