செய்திகள்

கண்டி எசல பெரஹவை முன்னிட்டு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹரவுக்கான பாதுகாப்பு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக பொஸிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிற்ப்பகல் இடம்பெறும் பெரஹரவை அடுத்து தலதாமாளிகை பெரஹர வைபவம் நிறைவடைய உள்ளது.கும்பல் பெரஹர ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. றன்தோலி பெரஹர ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கண்டி நகரத்தை பல வலயங்களாக பிரித்து இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கண்டி எசல பெரஹரவின் ஆரம்ப நிகழ்வு அடுத்த மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த பெரகஹர தொடர்பான பாதுகாப்பு விடயங்கள் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விபரங்களை தெரிவித்தார்.(15)