செய்திகள்

கல்வியை தொடர முடியாத சிங்கள மாணவர்களிற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் உதவி

யாழ் பல்கலைக்கழகத்தில் இரு தமிழ் மாணவிகளும் மற்றைய இரு சிங்கள மாணவர்களும் மிகவும் வறுமையின் கீழ் வாழ்ந்து வருவதை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் கல்வியில் முன்னேற்றம் கொண்ட மாணவர்களாக காணப்படுவதுடன் அவர்களுக்கு கல்விக்கு தேவையான செலவு தொகையினை அவர்களால் ஈடுசெய்ய முடியவில்லை என்பதை தெரியப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து அவர்களிற்கான மாதாந்த கொடுப்பனவு தொகையினை வழங்குவதற்கு கனடா சிவன் அறக்கட்டளை நிதியம் முன்வந்துள்ளது. வழமையாக தமிழ் சிங்கள மாணவர்கள் பரஸ்பரம் மோதிக்கொள்கின்ற நிலையை கடந்து இரு தரப்பு மாணவர்களும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படுவது அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வறுமையில் கல்வியை தொடர முடியாத சிங்கள மாணவர்களிற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் உதவிகளை தமிழ் தரப்புக்களிடமிருந்து பெற்று அவர்களது கல்வியை தொடர முன்னுதாரணமாக உதவியுள்ளது.(15)