செய்திகள்

கள்ள மண் கடத்தி வந்த ஹன்ரர் வாகனத்தை பொலிஸார் மறித்த போது நிற்காமல் தப்பியோடியது

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மேற்படி ஹன்ரர் வாகனத்தை பொலிஸார் மறித்த போது நிற்காமல் தப்பியோடியது. இதனையடுத்து பொலிஸார் அவ் வாகனத்தை துரத்திச் சென்றனர்.
பொதுமக்களின் உயிரைப் பணயம் வைத்து ஹன்ரர் வாகனத்தை பொலிஸார் துரத்தியதனால் அச்சத்தில் வீதியை விட்டு பொதுமக்கள் விலகி நின்ற சம்பவம் நேற்றிரவு பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹன்ரர் வாகனத்தின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு அசுரவேகத்தில் சென்றது. பொலிஸார் தொடர்ந்து துரத்திய போது பருத்தித்துறை மந்திகை வழியாக துன்னாலைப் பகுதிக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.