செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி ஓமந்தையில் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டம் வவுனியா- பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர், ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஓமந்தை இறம்பைக்குளம் வரை சென்றது.அதனைத் தொடர்ந்து அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், ‘அரசு நீதியை தர வேண்டும் ஓ.எம்.பி வேண்டாம்’, ‘இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே’ எனவும் கோசங்களை எழுப்பினர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சத்தியலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நீதியை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(15)