செய்திகள்

கால வரையறையின்றி மூடப்பட்டது கிழக்குப் பல்கலைகழகம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கால வரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை பகல் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதவாம் ஆண்டு மாணவர் இருவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முதலாம் ஆண்டு இரு மாணவர்கள், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் சிலமணிநேரம் பதற்ற நிலமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் இரு முதலாம் வருட மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர்.(15)