செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பல குளங்கள் நிரம்பும் நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பல குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன.பிரமந்தனாறு குளம் 6 அங்குலமாகவும், வன்னேரிக்குளம் 3 அங்குலமாகவும், குடமுருட்டி குளம் 3 அங்குலமாகவும் நீர்மட்டம் உள்ள நிலையில் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றன.கனகாம்பிகை குளம் மற்றும் கல்மடு குளம் வான் பாய உள்ளதால் கலிங்கு நீர் பாய்ந்தோடும் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்கும்படி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இரணைமடுக்குளம் 24.11 அடியாகவும், அக்கராயன் குளம் 15.11 அடியாகவும், கனகாம்பிகை குளம் 10.2 அடியாகவும், கல்மடு குளம் 23.2 அடியாகவும், நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(15)

SAMSUNG CAMERA PICTURES