கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு
வடக்கு மாகாணத்தில் வரும் டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 150 ஏக்கர் தனியார் காணிகள் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை வடக்கு மாகாணத்தில் இராணுவம் வசமுள்ள காணிகளைத் துரிதமாக விடுவிக்க வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இராணுவத்தினருடன் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான 150.15 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.(15)