செய்திகள்

குறிப்பிட்ட மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

கொழும்பு , புத்தளம் , கம்பஹா , யாழ் ,கிளிநொச்சி , மன்னார் , வவுனியா , முல்லைத்தீவு மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீண்டும் இன்று பிற்பகல் 2மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதுடன் நாளை காலை 6 மணிக்கு மீண்டும் தகர்த்தப்படும்.
இதேவேளை மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நாளை காலை 6 மணி வரையில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என்பதுடன் மீண்டும் அந்த மாவட்டங்களில் 2 மணிக்கு அமுலாகவுள்ளது. -(3)