செய்திகள்

குளவிக் கொட்டி உயிரிழந்த தொழிலாளிக்கு அஞ்சலி செலுத்தினார் அனுஷா சந்திரசேகரன்

தலவாக்கலை, சென்கூம்ஸ் தோட்டத்தில் நேற்று முன்தினம் குளவிக்கொட்டுக்கு இலக்கானதில் அகால மரணமடைந்த தாயின் இறுதி அஞ்சலியில் சட்டத்தரணியும் நுவரெலியா மாவட்ட சுயேட்சை வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ”
59 வயதான தாயொருவருக்கே இவ்வாறு மரணம் ஏற்பட்டுள்ளது.இந்த வயதிலும் தப்பிப்பதற்காக ஓட முயற்சித்தும் 7 குளவிகளுக்கு மேல் தாக்கியதால் மரணம் சம்பவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் இன்னும் எத்தனை எத்தனை நிவாரணம் கொடுத்தாலும், அறிக்கைகள் விட்டாலும் இந்த தாயின் உயிர் திரும்ப வரபோவதில்லை.
தொழிற்சங்க தலைமைகளின் அலட்சிய போக்கின் விளைவு தொழிலாளர்களின் மரணம் எனவும் தெரிவித்தார். -(3)83792364_1518767918282884_3102657934811725824_o 101142034_1518767158282960_203868675768320000_o