செய்திகள்

கேகாலை ,இரத்தினப்புரி மாவட்டங்களில் மண்சரிவு அபாய பகுதிகளில் வசிப்போரை வெறியேறுமாறு அறிவித்தல்

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்போரை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் தற்போது நிலவும் கடும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக அந்தப் பகுதியில் மண்சரிவு அபாயங்கள் ஏற்படும் நிலைமை காணப்படுவதாகவும் இதனால் அபாயமுள்ள பகுதிகளில் வசிப்போரை அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. -(3)