செய்திகள்

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

சீனாவில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இது தொடர்பாக கோட்டறிந்ததாக தெரிவித்த அவர் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்கு இந்த நோய் அறிகுறி காணப்படுமாயின் உடனடியாக அது தொடர்பில் அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டார். விமான நிலையத்தில் இதற்காக விசேட வைத்திய குழு ஒன்று செயற்படுவதாகவும் தெரிவித்தார். இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படவில்லை.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சீன நாட்டு சிறுவன் தொடர்பான தகவல் பதிவானது. பின்னர் இந்த சிறுவன் காய்ச்சல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது பொதுவான காய்ச்சல் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார். -(3)