செய்திகள்

கொழும்பில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் மருதானை, கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டாம் வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை இவ்வாறு தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அத்துடன், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முடக்கப்பட்ட பிரதேசங்களில் எவ்வித மாற்றமும் இல்ல என்பதையும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.இதனிடையே களனி பொலிஸ்பிரிவு திங்கள்முதல் முடக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் கெளனி, ஜா-எல, நீர்கொழும்பு, ராகம, வத்தளை,பேலியகொட, கடவத்தை ஆகிய பகுதிகள் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் முடக்க நிலையில் இருந்து நீக்கப்படும் என்றும் இராணுவ தளபதி கூறினார்.(15)