செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தில் பணிபுரியும் 11 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தில் இதற்கு முன்னர் கொரோனா தொற்றாளர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்டதாகத் தகவல் வெளியானது.இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தில் பணிபுரியும் மேலும் 11 ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை கப்பல்துறை நிறுவனத்தின் பணிபுரியும் 16 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 625 ஆக பதிவாகியுள்ளது.(15)