செய்திகள்

கோதாவுக்கு எதிரான வழக்குகள் : அவசரமாக கூடிய மகிந்த அணி

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூடி ஆராய்ந்துள்ளது.
நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அவர்கள் கூடிய ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது முக்கியமான விடயங்கள் சில கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவரின் பிரஜா உரிமை ஆவணங்கள் தொடர்பாக சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். -(3)