சஜித்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவுக்கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் முதலாவது ஆதரவுக்கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் குறித்த கூட்டத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்துக்கொண்டமை குறிப்பிடதக்கது. தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளர் முத்துராசா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி. சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா உட்பட தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் மக்கள் கருத்தாடல்கள் நிகழ்வும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பால் வவுனியாவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. (15)