செய்திகள்

சபை கூடி 50 நிமிடங்களில் ஒத்தி வைப்பு

பாராளுமன்றம் இன்று கூடி 50 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபையில் ஆளும் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட பிரேரணை முன்னறிவித்தல்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பை கோரிய நிலையில் அந்த வாக்கெடுப்பிற்கு முகம்கொடுப்பதற்கு ஆளும் தரப்பில் போதுமான உறுப்பினர்கள் இருக்காமையினால் அந்த பிரேரணை முன்னறிவித்தல்களை வேறு தினத்தில் முன்வைக்க தீர்மானித்த ஆளும் கட்சி பாரராளுமன்றத்தை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கவும் நடவடிக்கையெடுத்துள்ளது.
இன்றைய தினம் ஆளும் கட்சி பக்கத்தில் 4 பேர் மாத்திரமே இருந்துள்ளனர். -(3)