செய்திகள்

சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்ய தயாராகும் மகிந்த அணி

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஏற்படும் இடையூறுகள் தொடர்பாக சர்வதேசத்திடம் முறையிட தீர்மானித்துள்ளனர்.
அண்மையில் பாராளுமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தாம் இது தொடர்பாக சர்வதேசத்திடம் முறையிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தன தெரிவித்துள்ளார். -(3)