செய்திகள்

சற்று முன்னர் யாழ் வீதி புத்தூர் பகுதியில் விபத்து

பருத்தித்துறை – யாழ் வீதி புத்தூர் அரச வைப்பகம் ஒன்றிற்கு அருகில் விபத்து ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது
இவ்விபத்தில் புத்தூர் கிழக்கை சேர்ந்த பண்டா கிட்னர் (75) என்ற முதியவரே ஆபத்தான நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
இவ் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி விட்டு வீதியை கடக்கும் போதே எதிரே வந்த கயஸ் வாகனம் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது
நீண்ட நேரம் உயிருக்கு போராடிய முதியவரை வேடிக்கை பார்த்தவர்கள் நீண்ட நேரத்தின் பின்னரே பிரயாணிகள் பயணம் செய்த ஆட்டோ ஒன்றை மறித்து அவர்களை இறக்கி விட்டு ஆட்டோவில் குறித்த முதியவர் வைத்தியசாலை க்கு அனுப்பிவைக்கப்பட்டார்.இவ்விபத்து குறித்து அச்ச்கிவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.(15)