செய்திகள்

சவுதி அரேபியாவில் ஐரோப்பிய தூதர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குண்டு வெடித்தது

சவுதி அரேபியாவில் ஜித்தாவில் முதலாம் உலகப் போரின் நினைவு விழா நடைபெற்றது. விழாவில் பல ஐரோப்பிய தூதர்கள் கலந்து கொண்டிருந்த கல்லறையில் திடீர் என நடந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் “இந்த கோழைத்தனமான, நியாயப்படுத்த முடியாத தாக்குதலை பிரான்ஸ் கடுமையாக கண்டிக்கிறது” என்று கூறி உள்ளது.இக் குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுதகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல் வெளியிட்டுள்ளன.(15)