செய்திகள்

சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் பஸ் நிலைய வர்த்தகர்களுக்கு சார்பாக ஏனைய வர்த்தகர்களும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்! வவுனியா வர்த்தக சங்கம்

சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் பஸ் நிலைய வர்த்தகர்களுக்கு சார்பாக ஏனைய வர்த்தகர்களும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம் என வவுனியா வர்த்தக சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.கிரிதரன் தெரிவிததுள்ளார்.

வவுனியா வர்த்தக சங்கத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா பஸ் நிலைய வர்த்தகர்கள் தொடர்பில் சரியான முடிவெடுகடகாத பட்சத்தில் வர்த்தகர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.; உள்ளூர் பேரூந்து சேவையை பழைய பேரூந்து நிலையத்தில் ஓட விடும்பட்சத்தில் வர்த்தகர்கள் பாதிப்படையாது தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இது தொடர்பில் அதிகாரிகள் சரியான முடிவு எடுக்க வேண்டும். இன்றைய தினம் இதற்கு ஒரு சாதகமான பதில் கிடைக்காதவிடத்து ஏனைய வர்த்தகர்களும் பஸ் நிலைய வர்த்தகர்களுக்புகு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

வவுனியா பழைய பேரூந்து நிலையம் முதலாம் திகதி முதல் மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூந்து நிலைய வர்த்தகர்கள் இரண்டாவது நாளாகவும் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N5