செய்திகள்

சிஐடியிடம் அரியாலை துப்பாக்கிச் சூடு விசாரணை ஒப்படைப்பு

அரியாலை – மனியன்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய, இந்த விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 22ம் திகதி மனியன்தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் காயமடைந்த ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)