செய்திகள்

சீரற்ற காலநிலையால் சில இடங்களில் பாடசாலைகளுக்கு 2 நாள் பூட்டு

இரத்தினப்புரி , நிவித்திகல மற்றும் தெஹியோவிற்ற கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் தொடரும் கடும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாகவே இந்த விடுமுறையை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.