செய்திகள்

சுதந்திரக்கட்சியின் 65வது மாநாடு தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல்! சுற்றுலாத்துறை பிரதி அமைச்சரும் பங்கேற்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாடு குருநாகலில் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதன் ஒழுங்கமைப்பு தொடர்பில் வவுனியாவில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வன்னி மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அழைத்துச் செல்வது, அவர்களது பொறுப்புக்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சி வன்னியில் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் மற்றும் வன்னியின் குறைபாடுகள், தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சரும், 65வது மாநாட்டுக்கான வன்னித் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான அருந்திக்க பெர்ணாண்டோ, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னித் தொகுதி அமைப்பாளருமான (தமிழ், முஸ்லிம்) கே.கே.மஸ்தான், சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வாசல, பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

IMG_1035 IMG_1039 IMG_1042

N5