செய்திகள்

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதிகோரி,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரெஜினாவிற்கு நீதிகோரி,யாழ்;.பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இன்று மதியம் பல்கலைக்கழக வளவில் ஒன்று கூடிய ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கண்டன போராட்டத்தில் குதித்தனர்.பல்கலைக்கழக முன்றலில் ஆரமம்பித்த இப் போராட்டம் பலாலி வீதிவரை சென்று இரு மருங்கிலும் ஆபர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

காவல்துறை கயவர்களுடனா, காவல் துறையா கஞ்சா துறையா, இன்னும் எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் இப்படி ஆவது? உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.(15)univer-2