செய்திகள்

சு.கவின் மறுசீரமைப்பு நடவடிக்கை! அடுத்த வாரத்தில் ஆரம்பம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிப்பதற்கு தற்காலிக நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.
நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதற்கும் இங்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)