செய்திகள்

சு.கவை கைப்பற்ற திட்டமிடும் சந்திரிகாவின் குழு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் இணைந்து அந்தக் கட்சியை கைப்பற்றுவதற்கு திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்பொது அந்தக் குழுவினர் மாவட்ட ரீதியில் தமது அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவர்களுடன் முன்னாள் அமைச்சரான துமிந்த திஸாநாயக்கவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை தற்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திற்கு தற்போது பூட்டு போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)