செய்திகள்

ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க தவறிய ஆஸ்திரியா தூதரக அதிகாரிகளுக்கு சிக்கல்

தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க தவறிய ஆஸ்திரியாவிலுள்ள இலங்கை தூதுவர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை உடனடியாக நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
பல தடவைகள் தலைநகர் வியான்னாவிலுள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள ஜனாதிபதி முயற்சித்துள்ள போதும் அந்த தொலைபேசி அழைப்புகளுக்கு எவரும் பதிலளித்திருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
என்ன காரணத்திற்காக ஜனாதிபதி நேரடியாக அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தார். என்ற தகவல்கள் வெளியாகவில்லை. ஆனபோதும் அழைப்புக்கு பதிலளிக்க தவறியவர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)