செய்திகள்

தன்னிச்சையாக முடிவெடுக்கின்றார் அசங்க குருசிங்க- இலங்கை கிரிக்கெட்டில் புதிய சர்ச்சை

இலங்கை அணியின் முகாமையாளர் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் முடிவுகளை எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இலங்கை இந்திய அணிகளிற்கு இடையிலான டெஸ்ட்போட்டிகளி;ல்எந்த வீரர் விளையாடவேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கி;னறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாவது டெஸ்டில் இடதுகைசுழற்பந்து வீச்சாளர் லக்ஸன் சந்தகன் விளையாடவேண்டும் என அணியின் தலைவரும் தெரிவுக்குழு உறுப்பினர்களும் விரும்பியபோதிலும் அசங்க குருசிங்க சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஸ்பகுமாரவை தெரிவு செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால கடும் சீற்றமடைந்துள்ளதாகவும் இன்று அவர் அசங்ககுருசிங்கவை அழைத்து கடுமையாக சாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட்டிற்குள் மீண்டும் கொண்டுவரப்பட்ட நாளில் இருந்து அசங்க குருசிங்க அனைத்து விடயங்களிலும் மூக்கை நுழைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருசிங்கவின் இந்த நடவடிக்கை காரணமாகவே கிரஹாம்போர்ட் பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.