செய்திகள்

தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் நாட்டில் கிடையாது – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் நாட்டில் கிடையாது என தெரிவித்துள்ளார்.விஷேடமாக இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு எந்த பிரச்சினையோ அல்லது தேவையோ கிடையாது எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் சாரா எனும் பெண், இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதனால் அவரை உடனடியாக அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து வர முடியுமாயின் தாக்குதல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வேறு நபர்களின் தேவைக்காகவே சஹ்ரான் ஹசீமினால் மேற்கொள்ளப்பட்டது என மேலும் தெரிவித்தார்.(15)