செய்திகள்

திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 5 ஏக்கர் காணி விடுவிப்பு

வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே 1990ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் வசமிருந்த 5 ஏக்கர் காணி சுமார் 28 வருடங்களின் பின்னர் நேற்று 17 உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.குறித்த நிகழ்வு மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இடம்பெற்றது.

குறித்த 5 ஏக்கர் காணியில் சுமார் 15 குடும்பங்களுக்கான காணிகளும், திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபைக்கான காணி மற்றும் வைத்தியசாலைக்கான காணிகளும் அடங்குவதாக மன்னார் பிரதேச செயலக காணி அலுவலகர் க.வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.(15)