செய்திகள்

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை! நினைவிடத்தில் இருந்த பதாதைகள் பொலிஸாரால் அகற்றல்

நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தினூடாக தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் திலீபனின் நினைவிடத்தில் இருந்த அவரின் உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன.

 
இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் நினைவேந்தல் இடமும் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.
1987 செப்டம்பர் 15 ஆம் திகதி கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் 12 ஆவது நாளான செப்டம்பர் 26 ஆம் திகதி உயிர் நீத்தார்.

(3)