திஹாரியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று
திஹாரிய பகுதியில் அமைந்துள்ள ஹெலா ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.குறித்த நிறுவாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலையின் ஏனைய உழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது என்றும், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் கொரோனா பரிசோ தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதா கக் குறித்த நிறுவனம் விசேட அறிவித்தலில் தெரிவித் துள்ளது.கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவரின் மனைவி மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை யில் பணிபுரிந்த ஊழியர் எனத் தெரியவந்துள்ளது.(15)