செய்திகள்

தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஏழு பேரும் சீனர்களென தெரிவிப்பு

ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில், சிகிச்சை பெற்று வரும் ஏழு பேரும் சீனர்களென அந்த வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன.அத்துடன் குறித்த ஏழு பேர் தொடர்பான மருத்துவ பரிசோதனை அறிக்கை, இன்று பிற்பகல் அளவில் கிடைக்கப்பெறும். இதனூடாக அவர்களுக்கு கொறோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதனை கண்டறிய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாட்டில் பணியாற்றும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன இதனைத் தெரிவித்துள்ளார்.(15)