செய்திகள்

தேசிய நல்லிணக்கத்துடன் இலங்கையில் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் -இந்தியா

தேசிய நல்லிணக்கத்துடன் இலங்கையில் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டு அவர்களுக்கு கண்ணியமான, சமத்துவமான தீர்வொன்று வழங்கப்படவேண்டுமென்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை வெளிவிவகார அமைச்சர் புதிய ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்’ என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வாக்களித்தவர்களோ இல்லையோ இன மத பேதமின்றி அனைவரையும் சரிசமமாக பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது உரையில் கூறியுள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதேபோல் வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கு உறுதியாக இருப்பதாகவும் அந்த முயற்சியில் இந்தியாவை மதிப்புமிக்க பங்காளியாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(15)