செய்திகள்

தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் -இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கம்

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என ஒன்றிணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.வடக்கு மாகாண முதலமைச்சருடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுக்களில் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
போராட்டத்தை விரிவுபடுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் உணவு ஒருப்புப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருள்பிரகாசம் தெரிவித்தார்.
வட பிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் 3 நாள்களாக முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் நிறைவடைவதாக முன்னர் அறிவுக்கப்பட்டது. இ.போ.ச.வின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து வந்து முதலமைச்சருடன் நடத்திய பேச்சுக்களின் பின்னரே அவ்வாறு அறிவிக்கப்பட்டது.எனினும் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமென ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தற்பொழுது அறிவித்துள்ளது.(15)