செய்திகள்

தொல்பொருள் ஆலோசனைக்குழு உறுப்பினராக அஸ்கிரிய மஹா விகாரை பீடத்தின் உபாலி தேரர் நியமனம்

நேர்மையான சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடத்தப்படும் அமா தம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 200ஆவது தர்ம உபதேசம், தங்காலை கால்டன் இல்லத்தில் இன்று நடத்தப்பட்டது. இதன் போது தொல்பொருள் ஆலோசனைக்குழு உறுப்பினராக அஸ்கிரிய மஹா விகாரை பீடத்தின் வணக்கத்திற்குரிய அனுநாயக்கர் உபாலி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று திங்கட்கிழமை தங்காலை கால்டன் இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குறித்த நியமனத்துக்கான பத்திரம் உபாலி தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் குறைபாடுகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் அக்ரஹார காசியப்ப தேரரினால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.(15)