செய்திகள்

தோட்டக் காணிகளை தனியாருக்கு விற்காதே : மலையகத்தில் போராட்டம் ஆரம்பம்

மலையகத்தில் தோட்டக் காணிகளை தனியாருக்கும் விற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராக தற்போது மலையகத்தில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்ட காணியை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 4 ஏக்கர் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சுமார் 200 தோட்ட தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளதுடன், தோட்ட காணியை ஒருபோதும் விட்டுக் கொடுக்க தயார் இல்லை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். -(3)