செய்திகள்

நிலைமாறு நீதிக்கான நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கை ஆமை வேகத்திலேயே நகர்கிறது:ஐ. நா வின் புதிய ஆணையாளர் குற்றச்சாட்டு

நிலைமாறு நீதிக்கான நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் ஆமை வேகத்திலேயே செயற்பட்டிருப்பதாக ஐ. நா மனித உரிமைகள் அமைப்பின் புதிய ஆணையாளர் மிச்செல்லே பச்சிலேட் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று ஜெனீவாவில் ஆரம்பமான 39 ஆவது கூட்ட தொடரிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் இனரீதியான மற்றும் இனங்களுக்கு இடையிலான சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்றப்பபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் கவலை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.