செய்திகள்

நிவாரணங்கள் தாங்கிய மற்றுமொரு இந்தியக் கப்பல் வந்தடைந்துள்ளது

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணங்கள் தாங்கிய மற்றுமொரு இந்தியக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஐ.என்.எஸ் ஷர்துல் எனும் கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வௌ்ளம் காரணமாக அசுத்தமடைந்த கிணறுகளை துப்புரவு செய்வதற்கான உபகரணங்கள் இந்தக் கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தக் கப்பலில் 127 பேர் கொண்ட குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையைத் தொடர்ந்து நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்த இரண்டாவது இந்திய உதவிக் கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

n10