செய்திகள்

நிவாரண பணிகளில் முப்படையினர்

சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிக்கு முப்படையினரும் உதவிவருகின்றனர்.

காலி மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் 100க்கும் மேற்பட்ட கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். மொறவக்க கம்புறுபிட்டியவில் நான்கு கடற்படை வள்ளங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்திலும் கடற்படை வள்ளம் ஒன்று இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. களுத்துறை களவாண பிரதேசங்களிலும் கடற்படையின் 2 வள்ளங்கள் இவ்வாறு ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் 2 கெலிஹொப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மீட்பு பணிகளுக்காக  விமானப்படையின் MI   17,  Bell 212 ரக ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

n10