செய்திகள்

‘பசில் ராஜபக்சவின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது’

பசில் ராஜபக்சவின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இன்று (13) கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அவர் கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையத்தை திறந்து வைத்த பின்னர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ச வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் இருநூறு ஆசனங்களைப் பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் உங்களுடைய கருத்து என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பசில் ராஜபக்ச இவ்வாறுதான் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பகல்கனவு கண்டார்.

தாங்கள் தான் பத்து வருடத்துக்கு ஜனாதிபதி என்றெல்லாம் கூறினார்.

என்ன நடந்தது வடக்கு-கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் உள்ள மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியும், பிரதமரும் நல்லதொரு ஆட்சியை அமைத்தனர்.

அதன் பின்னர் பசில் ராஜபக்ஸ என்ன செய்தார். அமெரிக்காவுக்கு ஓடினார்.

அதேபோல்தான் உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்ததும் அவர் அமரிக்காவுக்கு ஓடிவிடுவார் அவரது பகல்கனவுகள் ஒருபோதும் பலிக்காது எனவும் தெரிவத்துள்ளார்.

n10