செய்திகள்

பத்திரிகையாளர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் இராஜினாமா

பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்லோவாக்கியாவின் கலாச்சார அமைச்சர் பதவி விலகியுள்ளார்
அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய வர்த்தகர்களின் குற்றச்செயல்கள் குறித்து செய்திகளை வெளியிட்ட ஜான் குசியாக்கும் அவரது பெண் சிநேகிதியும் சில நாட்களிற்கு முன்னர் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஸ்லோவாக்கியா பிரதமரின் நெருங்கிய சகாவான கலாச்சார அமைச்சர் மரேக் மடாரிக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
என்னுடைய பதவிக்காலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் என்னால் தொடர்ந்தும் அமைச்சராக பதவி வகிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.