செய்திகள்

பத்மாவத்’ பட கதாநாயகி தீபிகா படுகோனேவின் மூக்கை வெட்டினால் கோடிக்கணக்கில் பணம்-கான்பூர் சத்ரிய மகாசபை

பிரபல நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்து இன்று நாடு முழுவதும் வெளியாகும் ‘பத்மாவத்’ இந்தி படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள கோமதி நகர் பகுதியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கான்பூர் சத்ரிய மகாசபை என்ற அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
அப்போது அதன் தலைவர் கஜேந்திர சிங் ரஜாவத் கூறுகையில், ‘‘நாங்கள் கான்பூர் நகரவாசிகளிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து வருகிறோம். நடிகை தீபிகா படுகோனேவின் மூக்கை யார் வெட்டி எடுத்து வந்து எங்களிடம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த பணத்தை தருவோம்’’ என்றார். இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.(15)